tim_berners-lee
முனாஸ் நற்பணி மன்றம்

நோக்கம்:
சகல மக்களும் சமமானவர்கள் என்ற எண்ணப்பாட்டை உருவாக்குதலும் அதற்க்காக அற்பணிப்புடன் செயல் படலும்.

இதன் நிமிர்த்தம் சேவைகளாக:
  • வறிய மக்களை இனம்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவி புரிதல், அத்துடன் விதவைகளுக்கான விசேட வாழ்வாதரங்களை ஏற்படுத்தல்,


  • இயற்கை சீற்றத்தினால் நிர்கதியானவர்களின் நிலையறிந்து உதவிகள் புரிதல், இயற்கைச்சூழலைப் பாதுகாத்து அழகுபடுத்தல்,


  • சிறுவர்கள் முதியவர்கள் என்று போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இனம்கண்டு அவர்களுக்கான விளிப்புனர்வு நடவடிக்கை ஏற்படுத்தி சரியான முறைக்கு கொண்டு வரல்,


  • வறிய மக்களிள் தொழில் இன்றி கஸ்டப்படுபவர்களை இனம் கண்டு அதற்க்கான நடவடிக்கைகளைச்செய்தல்,


  • நிர்கதியாக்கப்பட்ட அகதிகள்,அனாதைகள், (அங்கவீனர்கள்) விசேட தேவையுடையோர்கள், நோயாளர்கள், போன்றோருக்கான நிவாரணங்களை உரியவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்திக்கொடுத்தல்.


  • மற்றும் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, சிரமதானம்,அனைத்திலும் பங்கெடுத்து உதவி புரிதல்


  • போன்றவைகளுடன் இன்னும் பல நற்சேவையே மன்றத்தின் நோக்கம்.



    இந்த சிறிசிகள் கல்வி கற்கும் வயதில் கல்வியிளந்து திரியும் தகவல் நற்பணி மன்றத்துக்கு கிடைத்ததால் உடனே அவ்விடம் சென்று பார்த்ததில் குடும்ப நிலமையும் இவர்களின் கவலையான கதைகளும் எங்களையும் கண்கலங்க வைத்தது இப்படியான துன்பமான நிலமையில் கல்விக்கோ வாழ்வாதாரத்துக்கோ உதவுதல் பெரும் கொடை எனவே இப்படியான சிறிசிகளும் அவர்களின் குடும்பமும் சந்தோசமாக இருக்க உங்களாலும் உதவ முடியும் உறவுகளே இவர்களின் கல்விக்கும் உணவுக்கும் நாம் நம்மால் முடிந்த உதவிகளைச்செய்ய முன்வாருங்கள் படைத்தவன் நம்மைக்காப்பான் உங்கள் உதவிகளையும் நற்பணி மன்றம் நாடி நிற்கிறது நன்றி.
    நிருவாகம்
    நற்பணி மன்றம்.

    அம்பாரை மாவட்டம் திராய்க்கேணி என்னும் இடத்தில் வசிக்கும் குடும்பம் இவர்களுக்கு 20 வயதில் ஒரு பெண் இருக்கிறார் ஆனால் இன்னும் திருமணம் செய்து கொடுக்க வில்லை காரணம் பல சொல்கிறார் அதில் முதல் காரணம் போதிய பணம் இல்லாமையும் தொழில் இல்லாமையுமே இவரின் வயதில் பெரிசாக எதுவும் செய்ய முடியாது

    அத்துடன் எந்த வருமானமும் இல்லை அவரின் மகளை வாழவைக்க உதவுமாறு கேட்கின்றார் இந்த நபர்
    வசதி படைத்தவர்கள் உதவும் கரங்கள் தனவந்தர்கள் உங்களின் அன்புக்கரங்களால் இவர்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்று தயவாய் கேட்டுக்கொள்கிறோம்.

    நிருவாகம்
    நற்பணி மன்றம்.
    அம்பாரை மாவட்டம் திராய்க்கேணி என்னும் இடத்தில் வசிக்கும் இவர் பெயர் வீரன் இவருக்கு கல்வி கற்க்கும் 5 மக்கள் இருக்கிறார்கள் ஆனால் நேரத்துக்கே சாப்பிட வசதியில்லாமல் இருக்கிறேன் அப்படி இருக்கும் போது எப்படி பிள்ளைகளைப்படிக்க வைப்பது என்று கேட்கிறார் இவர்.


    ஆமாம் வசதியின்மையால் நாங்கள் இவரை சந்திக்கும் போது இவரின் மனைவியும் 2 பிள்ளைகளும் வீட்டு வேலைகளுக்கு சென்றுள்ளதாக அறிந்தோம் கல்வி கற்கும் வயதில் வீட்டு வேலை செய்து பிளைக்கும் அப்பாவிகளான இவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் அன்பர்களே உங்கள் மனம் விரும்பி இப்படியான உள்ளங்களுக்கு உதவினால்தான் இவர்களின் வாழ்வும் சந்தோசமாக இருக்கும் எனவே உங்கள் உதவிகளால் இவர்களும் பயன் பெற உங்களால் முடிந்தளவு உதவி செய்யுங்கள்.

    நிருவாகம்
    நற்பனி மன்றம்.

    2012 ஆம் ஆண்டுக்கு கல்வி பயிலும் மாணவர்களில் வறுமைக்கோட்டின் கீழ் கல்விகற்க்கும் பாவப்பட்ட மாணவர்கள் பலருக்கு முனாஸ் நற்பணி மன்றம் அப்பியாசக்கொப்பிகள் மற்றும் அவர்களுக்கு கல்விக்குத்தேவையான இதர பல உதவிகளைச்செய்ய முன் வந்துள்ளது 
    இதில் அம்பாரை மாவட்ட பிந்தங்கிய கிராமம் திராய்க்கேணி என்னும் இடத்தில் 99 வீதம் வறிய இந்து மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் மற்றும் ஏனைய இடங்கள், முஸ்லீம், மற்றும் இனம் மதம் பார்க்காது உதவிகள் செய்ய வேண்டும்,
     எனவே இதில் நல்ல மனம்படைத்த அன்பு உள்ளங்கள
    நீங்களும் இந்த அப்பாவி ஏழை மாணவர்கள் ஒருவருக்கேனும் உதவிட விரும்பினால் இம்மாதம் 30 க்கு முதல் நற்பணி மன்றத்துக்கு நிதி அனுப்பினால் எங்களால் உங்கள் பெயரிலேயே உதவ முடியும்.


    எனவே அன்பர்களே பணம் படைத்தவர்களே கொடையாளிகளே கல்விக்கு உதவுவோர் என்றும் மறணிப்பதில்லை என்னும் கோற்பாட்டிற்கமைய உங்களின் உதவிகளையும் எதிர்பார்க்கிறோம்.




    நிருவாகம்.
    நற்பணி மன்றம்.


    தொடர்புக்கு:
    0094 67 22 77978
    0094 77 12 76680


    209 SMALL MASJITH ROAD
    ADDALAICHENAI-10
    SRI LANKA.




    S.L.MUNAS 
    A/C NO:- 10018576
    BANK OF CEYLON 
    ADDALAICHENAI,
    SRI LANKA.
    நாங்கள் இத்தளத்திலே ஒரு அடக்கஷ்தலத்தின் புகைப்படம் போட்டிருந்தோம் அதனைப்பார்வை இட்ட திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைஷால் ஹாஸிம் அவர்கள் 150000 பண உதவி செய்துள்ளார் இன்ஷாஹ் அல்லாஹ் அவரின் அரசியல் பயணம் என்றுமே முன்னோக்கிச்செல்ல வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். நன்றி



    நிருவாகம்
    நற்பணி மன்றம்

    அண்மையவை

    நன்கொடைகள் / DONATES

    உங்கள் நன்கொடைகளை நற்பணி மன்றத்தின் கணக்கு மூலமாக அனுப்பும் போது இக்கணக்கினை மீளாய்வு செய்ய 3 ஆலோசகர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பார்வையிலேயே உரியவர்களை சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

    S.L.MUNAS. A/C: 10018576.
    BANK OF CEYLON
    ADDALAICHENAI
    SRILANKA.


    MUNAS NATPANI MANTRAM
    NO: 209 SMALL MASJITH ROAD
    ADDAlAICHENAI: 10
    SRILANKA

    TEL/FAX: 0094 672277978
    MOB: 0094 771276680


    தர்மம் செய்வோம் நன்மையடைவோம்.

    அதிகம் பார்க்கப்பட்டவை

    Followers

    ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

    இனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

    உலக நாடுகளில் இருந்து

    காட்சிக்காக மட்டும்